Kural 100 of 1330
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Iniya Ulavaaka Innaadha Kooral Kaniiruppak Kaaikavarn Thatru
When pleasant words are easy, bitter words to use,Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose
விளக்கம் — மு. வரதராசன்
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
விளக்கம் — சாலமன் பாப்பையா
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
விளக்கம் — கலைஞர்
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்
Meaning (English)
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.