Kural 1004 of 1330
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.
Echchamendru Enennung Kollo Oruvaraal Nachchap Pataaa Thavan
Whom no one loves, when he shall pass away,What doth he look to leave behind, I pray
விளக்கம் — மு. வரதராசன்
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?
விளக்கம் — கலைஞர்
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
Meaning (English)
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?