Thirukkuralagam
Kural 1012 of 1330

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.

Oonutai Echcham Uyirkkellaam Veralla Naanutaimai Maandhar Sirappu

Food, clothing, and other things alike all beings own; By sense of shame the excellence of men is known

விளக்கம் — மு. வரதராசன்

உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

விளக்கம் — கலைஞர்

உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்

Meaning (English)

Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.

Open the interactive app →