Thirukkuralagam
Kural 1016 of 1330

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.

Naanveli Kollaadhu Manno Viyangnaalam Penalar Melaa Yavar

Unless the hedge of shame inviolate remain,For men of lofty soul the earth's vast realms no charms retain

விளக்கம் — மு. வரதராசன்

நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

விளக்கம் — கலைஞர்

பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்

Meaning (English)

The great make modesty their barrier (of defence) and not the wide world.

Open the interactive app →