Thirukkuralagam
Kural 1019 of 1330

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை.

Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum Naaninmai Nindrak Katai

'Twill race consume if right observance fail; 'Twill every good consume if shamelessness prevail

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

விளக்கம் — கலைஞர்

கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்

Meaning (English)

Want of manners injures one’s family; but want of modesty injures one’s character.

Open the interactive app →