Thirukkuralagam
Kural 1026 of 1330

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha Illaanmai Aakkik Kolal

Of virtuous manliness the world accords the praiseTo him who gives his powers, the house from which he sprang to raise

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

விளக்கம் — கலைஞர்

நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்

Meaning (English)

A man’s true manliness consists in making himself the head and benefactor of his family.

Open the interactive app →