Thirukkuralagam
Kural 1028 of 1330

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்.

Kutiseyvaark Killai Paruvam Matiseydhu Maanang Karudhak Ketum

Wait for no season, when you would your house uprear; 'Twill perish, if you wait supine, or hold your honour dear

விளக்கம் — மு. வரதராசன்

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

விளக்கம் — கலைஞர்

தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்

Meaning (English)

As a family sufers by (one’s) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.

Open the interactive app →