Thirukkuralagam
Kural 1034 of 1330

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.

Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar Alakutai Neezha Lavar

O'er many a land they 'll see their monarch reign,Whose fields are shaded by the waving grain

விளக்கம் — மு. வரதராசன்

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

விளக்கம் — கலைஞர்

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்

Meaning (English)

Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

Open the interactive app →