Thirukkuralagam
Kural 1036 of 1330

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை.

Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum Vittemen Paarkkum Nilai

For those who 've left what all men love no place is found,When they with folded hands remain who till the ground

விளக்கம் — மு. வரதராசன்

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

விளக்கம் — கலைஞர்

எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்

Meaning (English)

If the farmer’s hands are slackened, even the ascetic state will fail.

Open the interactive app →