Kural 1045 of 1330
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith Thunpangal Sendru Patum
From poverty, that grievous woe,Attendant sorrows plenteous grow
விளக்கம் — மு. வரதராசன்
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
விளக்கம் — கலைஞர்
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
Meaning (English)
The misery of poverty brings in its train many (more) miseries.