Thirukkuralagam
Kural 1051 of 1330

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.

Irakka Iraththakkaark Kaanin Karappin Avarpazhi Thampazhi Andru

When those you find from whom 'tis meet to ask,- for aid apply; Theirs is the sin, not yours, if they the gift deny

விளக்கம் — மு. வரதராசன்

இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

விளக்கம் — கலைஞர்

கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல

Meaning (English)

If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.

Open the interactive app →