Thirukkuralagam
Kural 1110 of 1330

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.

Aridhoru Ariyaamai Kantatraal Kaamam Seridhorum Seyizhai Maattu

The more men learn, the more their lack of learning they detect; 'Tis so when I approach the maid with gleaming jewels decked

விளக்கம் — மு. வரதராசன்

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

விளக்கம் — கலைஞர்

மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது

Meaning (English)

As (one’s) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).

Open the interactive app →