Thirukkuralagam
Kural 1143 of 1330

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

Uraaadho Oorarindha Kelavai Adhanaip Peraaadhu Petranna Neerththu

The rumour spread within the town, is it not gain to me?It is as though that were obtained that may not be

விளக்கம் — மு. வரதராசன்

ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

விளக்கம் — கலைஞர்

எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

Meaning (English)

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

Open the interactive app →