Thirukkuralagam
Kural 1159 of 1330

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Thotirsutin Alladhu Kaamanoi Pola Vitirsutal Aatrumo Thee

Fire burns the hands that touch; but smart of loveWill burn in hearts that far away remove

விளக்கம் — மு. வரதராசன்

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?

விளக்கம் — கலைஞர்

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!

Meaning (English)

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?

Open the interactive app →