Thirukkuralagam
Kural 1178 of 1330

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்.

Penaadhu Pettaar Ularmanno Matravark Kaanaadhu Amaivila Kan

Who loved me once, onloving now doth here remain; Not seeing him, my eye no rest can gain

விளக்கம் — மு. வரதராசன்

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!

விளக்கம் — கலைஞர்

என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

Meaning (English)

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes sufer from not seeing him.

Open the interactive app →