Thirukkuralagam
Kural 1180 of 1330

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.

Maraiperal Ooraarkku Aridhandraal Empol Araiparai Kannaar Akaththu

It is not hard for all the town the knowledge to obtain,When eyes, as mine, like beaten tambours, make the mystery plain

விளக்கம் — மு. வரதராசன்

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

விளக்கம் — கலைஞர்

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல

Meaning (English)

It is not dificult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

Open the interactive app →