Kural 1205 of 1330
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.
Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol Emnenjaththu Ovaa Varal
Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes
விளக்கம் — மு. வரதராசன்
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
விளக்கம் — சாலமன் பாப்பையா
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?
விளக்கம் — கலைஞர்
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்
Meaning (English)
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.