Thirukkuralagam
Kural 1205 of 1330

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol Emnenjaththu Ovaa Varal

Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes

விளக்கம் — மு. வரதராசன்

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

விளக்கம் — சாலமன் பாப்பையா

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

விளக்கம் — கலைஞர்

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்

Meaning (English)

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.

Open the interactive app →