Thirukkuralagam
Kural 1207 of 1330

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.

Marappin Evanaavan Markol Marappariyen Ullinum Ullam Sutum

If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget

விளக்கம் — மு. வரதராசன்

( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?

விளக்கம் — சாலமன் பாப்பையா

அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?

விளக்கம் — கலைஞர்

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

Meaning (English)

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

Open the interactive app →