Thirukkuralagam
Kural 122 of 1330

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

Kaakka Porulaa Atakkaththai Aakkam Adhaninooung Killai Uyirkku

Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul

விளக்கம் — மு. வரதராசன்

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

விளக்கம் — கலைஞர்

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை

Meaning (English)

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

Open the interactive app →