Thirukkuralagam
Kural 1233 of 1330

தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.

Thanandhamai Saala Arivippa Polum Manandhanaal Veengiya Thol

These withered arms, desertion's pangs abundantly display,That swelled with joy on that glad nuptial day

விளக்கம் — மு. வரதராசன்

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.

விளக்கம் — கலைஞர்

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்

Meaning (English)

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

Open the interactive app →