Thirukkuralagam
Kural 1242 of 1330

காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.

Kaadhal Avarilar Aakanee Novadhu Pedhaimai Vaazhiyen Nenju

Since he loves not, thy smartIs folly, fare thee well my heart

விளக்கம் — மு. வரதராசன்

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

விளக்கம் — கலைஞர்

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க

Meaning (English)

May you live, O my soul! While he is without love, for you to sufer is (simple) folly.

Open the interactive app →