Kural 1252 of 1330
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்.
Kaamam Enavondro Kannindren Nenjaththai Yaamaththum Aalum Thozhil
What men call love is the one thing of merciless power; It gives my soul no rest, e'en in the midnight hour
விளக்கம் — மு. வரதராசன்
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.
விளக்கம் — கலைஞர்
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது
Meaning (English)
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.