Thirukkuralagam
Kural 1254 of 1330

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்.

Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam Maraiyirandhu Mandru Patum

In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veil

விளக்கம் — மு. வரதராசன்

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

விளக்கம் — கலைஞர்

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே

Meaning (English)

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

Open the interactive app →