Thirukkuralagam
Kural 1256 of 1330

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.

Setravar Pinseral Venti Aliththaro Etrennai Utra Thuyar

My grief how full of grace, I pray you see!It seeks to follow him that hateth me

விளக்கம் — மு. வரதராசன்

வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!

விளக்கம் — சாலமன் பாப்பையா

என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.

விளக்கம் — கலைஞர்

வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே

Meaning (English)

The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

Open the interactive app →