Thirukkuralagam
Kural 1275 of 1330

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

Seridhoti Seydhirandha Kallam Urudhuyar Theerkkum Marundhondru Utaiththu

The secret wiles of her with thronging armlets decked,Are medicines by which my raising grief is checked

விளக்கம் — மு. வரதராசன்

காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.

விளக்கம் — கலைஞர்

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது

Meaning (English)

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

Open the interactive app →