Thirukkuralagam
Kural 1286 of 1330

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.

Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal Kaanen Thavaral Lavai

When him I see, to all his faults I 'm blind; But when I see him not, nothing but faults I find

விளக்கம் — மு. வரதராசன்

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

விளக்கம் — கலைஞர்

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை

Meaning (English)

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.

Open the interactive app →