Thirukkuralagam
Kural 1289 of 1330

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்.

Malarinum Mellidhu Kaamam Silaradhan Sevvi Thalaippatu Vaar

Love is tender as an opening flower In season dueTo gain its perfect bliss is rapture known to few

விளக்கம் — மு. வரதராசன்

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

விளக்கம் — சாலமன் பாப்பையா

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே

விளக்கம் — கலைஞர்

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

Meaning (English)

Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

Open the interactive app →