Thirukkuralagam
Kural 1299 of 1330

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி.

Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya Nenjan Thunaiyal Vazhi

And who will aid me in my hour of grief,If my own heart comes not to my relief

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

விளக்கம் — கலைஞர்

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

Meaning (English)

Who would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?

Open the interactive app →