Thirukkuralagam
Kural 1301 of 1330

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

Pullaa Thiraaap Pulaththai Avar Urum Allalnoi Kaankam Siridhu

Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll prove

விளக்கம் — மு. வரதராசன்

( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

விளக்கம் — கலைஞர்

ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக

Meaning (English)

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.

Open the interactive app →