Thirukkuralagam
Kural 144 of 1330

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.

Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum Theraan Piranil Pukal

How great soe'er they be, what gain have they of life,Who, not a whit reflecting, seek a neighbour's wife

விளக்கம் — மு. வரதராசன்

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

விளக்கம் — சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

விளக்கம் — கலைஞர்

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்

Meaning (English)

However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?

Open the interactive app →