Kural 146 of 1330
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Pakaipaavam Achcham Pazhiyena Naankum Ikavaavaam Illirappaan Kan
Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four
விளக்கம் — மு. வரதராசன்
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
விளக்கம் — கலைஞர்
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
Meaning (English)
Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.