Thirukkuralagam
Kural 146 of 1330

பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Pakaipaavam Achcham Pazhiyena Naankum Ikavaavaam Illirappaan Kan

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four

விளக்கம் — மு. வரதராசன்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

விளக்கம் — கலைஞர்

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

Meaning (English)

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.

Open the interactive app →