Kural 188 of 1330
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.
Thunniyaar Kutramum Thootrum Marapinaar Ennaikol Edhilaar Maattu
Whose nature bids them faults of closest friends proclaimWhat mercy will they show to other men's good name
விளக்கம் — மு. வரதராசன்
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
விளக்கம் — சாலமன் பாப்பையா
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!
விளக்கம் — கலைஞர்
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
Meaning (English)
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?