Thirukkuralagam
Kural 193 of 1330

நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.

Nayanilan Enpadhu Sollum Payanila Paarith Thuraikkum Urai

Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

விளக்கம் — கலைஞர்

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்

Meaning (English)

That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.”

Open the interactive app →