Kural 198 of 1330
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
Arumpayan Aayum Arivinaar Sollaar Perumpayan Illaadha Sol
The wise who weigh the worth of every utterance,Speak none but words of deep significance
விளக்கம் — மு. வரதராசன்
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
விளக்கம் — சாலமன் பாப்பையா
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
விளக்கம் — கலைஞர்
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்
Meaning (English)
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.