Thirukkuralagam
Kural 2 of 1330

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan Natraal Thozhaaar Enin

No fruit have men of all their studied lore,Save they the 'Purely Wise One's' feet adore

விளக்கம் — மு. வரதராசன்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

விளக்கம் — சாலமன் பாப்பையா

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

விளக்கம் — கலைஞர்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

Meaning (English)

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

Open the interactive app →