Thirukkuralagam
Kural 200 of 1330

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

Solluka Sollir Payanutaiya Sollarka Sollir Payanilaach Chol

If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word

விளக்கம் — மு. வரதராசன்

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

விளக்கம் — கலைஞர்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்

Meaning (English)

Speak what is useful, and speak not useless words.

Open the interactive app →