Thirukkuralagam
Kural 205 of 1330

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.

Ilan Endru Theeyavai Seyyarka Seyyin Ilanaakum Matrum Peyarththu

Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still

விளக்கம் — மு. வரதராசன்

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

விளக்கம் — கலைஞர்

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்

Meaning (English)

Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.

Open the interactive app →