Thirukkuralagam
Kural 208 of 1330

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.

Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai Veeyaadhu Atiurain Thatru

Man's shadow dogs his steps where'er he wends; Destruction thus on sinful deeds attends

விளக்கம் — மு. வரதராசன்

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

விளக்கம் — கலைஞர்

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்

Meaning (English)

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

Open the interactive app →