Kural 212 of 1330
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku Velaanmai Seydhar Poruttu
The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours
விளக்கம் — மு. வரதராசன்
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
விளக்கம் — கலைஞர்
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
Meaning (English)
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.