Kural 214 of 1330
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan Seththaarul Vaikkap Patum
Who knows what's human life's befitting grace,He lives; the rest 'mongst dead men have their place
விளக்கம் — மு. வரதராசன்
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
விளக்கம் — கலைஞர்
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்
Meaning (English)
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.