Thirukkuralagam
Kural 226 of 1330

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

Atraar Azhipasi Theerththal Aqdhoruvan Petraan Porulvaip Puzhi

Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secure

விளக்கம் — மு. வரதராசன்

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

விளக்கம் — கலைஞர்

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்

Meaning (English)

The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

Open the interactive app →