Thirukkuralagam
Kural 245 of 1330

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.

Allal Arulaalvaarkku Illai Valivazhangum Mallanmaa Gnaalang Kari

The teeming earth's vast realm, round which the wild winds blow,Is witness, men of 'grace' no woeful want shall know

விளக்கம் — மு. வரதராசன்

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

விளக்கம் — கலைஞர்

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று

Meaning (English)

This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.

Open the interactive app →