Kural 249 of 1330
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
Therulaadhaan Meypporul Kantatraal Therin Arulaadhaan Seyyum Aram
When souls unwise true wisdom's mystic vision see,The 'graceless' man may work true works of charity
விளக்கம் — மு. வரதராசன்
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
விளக்கம் — கலைஞர்
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்
Meaning (English)
f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.