Thirukkuralagam
Kural 252 of 1330

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi Aangillai Oondhin Pavarkku

No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate

விளக்கம் — மு. வரதராசன்

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.

விளக்கம் — கலைஞர்

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை

Meaning (English)

As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.

Open the interactive app →