Thirukkuralagam
Kural 268 of 1330

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.

Thannuyir Thaanarap Petraanai Enaiya Mannuyi Rellaan Thozhum

Who gains himself in utter self-control,Him worships every other living soul

விளக்கம் — மு. வரதராசன்

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

விளக்கம் — கலைஞர்

``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்

Meaning (English)

All other creatures will worship him who has attained the control of his own soul.

Open the interactive app →