Thirukkuralagam
Kural 271 of 1330

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal Aindhum Akaththe Nakum

Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within

விளக்கம் — மு. வரதராசன்

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

விளக்கம் — கலைஞர்

ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்

Meaning (English)

The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.

Open the interactive app →