Thirukkuralagam
Kural 278 of 1330

மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.

Manaththadhu Maasaaka Maantaar Neeraati Maraindhozhuku Maandhar Palar

Many wash in hollowed waters, living lives of hidden shame; Foul in heart, yet high upraised of men in virtuous fame

விளக்கம் — மு. வரதராசன்

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

விளக்கம் — கலைஞர்

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்

Meaning (English)

There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).

Open the interactive app →