Thirukkuralagam
Kural 298 of 1330

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai Vaaimaiyaal Kaanap Patum

Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow

விளக்கம் — மு. வரதராசன்

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

விளக்கம் — கலைஞர்

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்

Meaning (English)

Purity of body is produced by water and purity of mind by truthfulness.

Open the interactive app →