Thirukkuralagam
Kural 307 of 1330

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

Sinaththaip Porulendru Kontavan Ketu Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru

The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing

விளக்கம் — மு. வரதராசன்

(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

விளக்கம் — கலைஞர்

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்

Meaning (English)

Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

Open the interactive app →