Thirukkuralagam
Kural 329 of 1330

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.

Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar Punmai Therivaa Rakaththu

Whose trade is 'killing', always vile they show,To minds of them who what is vileness know

விளக்கம் — மு. வரதராசன்

கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

விளக்கம் — கலைஞர்

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்

Meaning (English)

Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.

Open the interactive app →